வியாழன், 26 மார்ச், 2020

கற்பக விநாயகர்

அற்புதங்கள்நிகழ்த்தும்
                        ஆனந்தகளிறாம்
கற்பக விநாயக
               கழலினைப் பணிவோம்

மூவருக்கும் முதன்மை
                         தெய்வம் அவன்
யாவரையும் காக்கும்
                           நாதன் அவன்
தேவர்குலம் தழைக்க
                           அருளியவன்
மாந்தர்குலத்தினை
                          வாழவைப்பான்.

கற்பவை யாவும் அவனது
                                       அருளே
பொற்சபை நடனநாயகன்
                                        மகனே
முற்பிறவி வினை அறுப்பான்
                                     அவனே
சற்குருவாய்என்னைகாக்கும்
                                    துணையே

             .        சிவதாசன் .பாஸ்கர்
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக